Friday 20 July 2018

இனிய இல்லம்

குழந்தை வளர‌ நல்ல‌ வீட்டுச் சூழலை ஏற்படுத்துங்கள்.

நல்ல‌ விஷயத்தை    மனைவியிடம் பார்த்தால் குழந்தை முன் மனைவியைப் பாராட்டுங்கள். ஆதுபோலவே மனைவியும்  கணவனை உயர்வாகக் கூற‌ வேண்டும்.

அதை விடுத்து, குழந்தை முன் அம்மாவை," உனக்கு அறிவே கிடையாது" என்று கூறினால் அதே வார்த்தையை குழந்தை தன் இருபது வயதில் கூறுவான். 

உங்கள் கணவரிடம்  உள்ள‌ நல்ல‌ குணத்தை பாராட்டுங்கள். "தாத்தாவும், பாட்டியும் அப்பாவை நல்லா வளர்த்திருக்காங்க‌" என்று குழந்தையிடம் பெருமையாகக் கூறுங்கள்.

குழந்தையும் பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்வான்.

குழந்தை தப்பு செய்தால் கண்டியுங்கள். தண்டனை தேவையெனில் 
 த‌ண்டியுங்கள்.

குழந்தை தடுக்கி கீழே விழுந்தால் தரையை அடிப்பதை விட்டுவிட்டு 
"பார்த்து கவனமா  நடக்கனும்" என்று அறிவுறுத்துங்கள்.

குழந்தை தடுக்கி விழுந்தால் தரை என்ன‌ செய்யும்?
நாளை, குழந்தை தவறு செய்தால் அடுத்தவரை திட்டுவது நியாயமா?




குட்டிக் கதை

ஒரு காட்டில் இரு கிளிகள் ஒன்றாக‌ வசித்தன‌. வேடன் ஒருவன் அவற்றைப் பிடித்து ஒன்றை முனிவர் ஒருவரிடமும் , மற்றதை கசாப்புக் கடைக்காரரிடமும் கொடுத்து விட்டான்.

முனிவர் வீட்டில் வளர்ந்த‌ கிளி, "வாங்க‌. உட்காருங்க‌" என்று அன்பாக‌ உபசரிக்கக் கற்றுக் கொண்டது.

கசாப்புக்கடைக்காரர் வீட்டில் வளர்ந்த‌ கிளி," வெட்டு, குத்து" என்ற‌ சொற்களைப் பேசக் கற்றுக் கொண்டது.

ஆம். வளரும் சூழலைப் பொறுத்து அவர்கள் சுபாவம் அமையும்.




 இன்னொரு விஷயம்

'அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? ' இதென்ன‌ தப்பான‌ கேள்வி?

குழந்தை அம்மாவிடம் வந்து,"அம்மா, எனக்கு யாரைப் பிடிக்கும். அம்மாவையா அல்லது அப்பாவையா?" என்று கேட்டால்

" அப்பாவைப் பிடிக்கும். எனக்கும் அப்பாவைப் பிடிக்கும். உனக்கும் அப்பாவைப் பிடிக்கும்" என்று அம்மா கூற‌ வேண்டும்.

அதுபோலவே அப்பாவும்," எனக்கும் அம்மாவைப் பிடிக்கும். உனக்கும் அம்மாவைப் பிடிக்கும்" என்று கூற‌ வேண்டும்.

 அத்தகைய‌  அன்பான‌ சூழல் நிலவும் குடும்பமே நல்லதொரு குடும்பம். உங்கள் இல்லம் இனிய‌ இல்லமாக‌ அமைய‌ வாழ்த்துக்கள்.



2 comments:

  1. குட்டிக்குட்டியாக நிறைய நல்லது சொல்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அருசுவை தந்த அன்புத் தோழியே குட்டி குட்டியா
      சொன்னா நறுக்குனு இருக்கும்ல அதனால தான் இமா

      Delete