Saturday 21 July 2018

அன்னப்பறவை

வாழ்க்கைப் பயணம் மலர்ப்பாதை அல்ல‌. கல்லும் முள்ளும் நிறைந்தது தான்.

அதைப் புரிந்து மனமாற‌ ஏற்றுக்கொண்டு நாம் தான் கவனமாக‌  நடக்கப் பழகவேண்டும். அதையும் சந்தோஷமாகவே  செய்ய‌ வேண்டும்.

கசப்புகள் வாழ்க்கையில் வரும் போகும். அதை நாம் தாண்டிச் செல்ல‌ வேண்டும்.

நல்லதைப் பேசுங்கள். நல்லதையே சிந்தியுங்கள்.

நீ எதை நினைக்கிறாயோ; அதுவாகவே நீ ஆகிறாய்.
இதுவே அஹம் பிரம்மாஸ்மி. தத்வமசி.

எதிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும்.  அன்னப்பறவை போல‌ நல்லதை மட்டும் பிரித்தறிய‌ உணர‌ வேண்டும்.



நம் நாட்டில் 99 சதவீதம் நல்லவங்க‌ தான். ஊடகங்கள் ஒரு சதவீத‌ கெட்டதைத் தான் செய்தியாகக் காட்டும்.

சல்லடை நல்ல‌ பொருளை கீழே விட்டுவிட்டு  வேண்டாத‌ பொருளை தன்னிடம் தக்க‌ வைத்துக் கொள்ளும். அப்படி இருக்கக் கூடாது.

என்றோ ஒரு நாள் உன் அம்மா, அப்பா, கணவன், மணைவி கோபத்தில் சொன்ன‌ ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு  நல்லவற்றை மறந்து விடுவது என்ன‌ நியாயம்?

பழங்கணக்கு பார்க்காதே. நீங்கள் நன்றாக‌ வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் ,இந்த‌ உலகிலேயே அவர்கள் மட்டும்  தான்.

சர்வம் அன்பு மயம்.

வாழ்க‌  அன்புடன்.:))

2 comments:

  1. நல்ல கருத்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள இமா மிக்க நன்றி

      Delete