அன்பு செலுத்த அம்மா
கண்டிப்பு காட்ட அப்பா
குழந்தைகள் தவறு செய்தால் கண்டிச்சு வளர்க்க வேண்டும்.
அந்தக் காலத்தில் வீட்டில் நாலைந்து குழந்தைகள் இருப்பார்கள். பெரிய குழந்தையே சின்னதைக் கவனித்துக் கொள்ளும்.
இப்போ அனைவரது வீட்டிலும் ஒன்று, அல்லது இரண்டு குழந்தைகள் தான். அவர்கள் அதீத செல்லத்துடன் வளர்க்கப்படுகிறார்கள்.
அதனால் வளர்ந்த பின் சிறு ஏமாற்றங்களைக் கூட தாங்க முடியாதவர்களாக ஆகி விடுகின்றார்கள்.
"அத்தை பையன் நிறைய மார்க் வாங்கிட்டான் . நீ தான் கம்மி" இப்படி அந்தக் காலத்தில் யாரும் சொல்லல.
நூற்றுக்கு நூறு மார்க் வாங்கறதை விட நல்ல மனிதனாக வளர்வதே முக்கியம்.
குழந்தை கேட்ட எல்லாவற்றையும் உடனே கொடுக்கனும்னு அவசியமில்லை. ஒரு வாரம் கழித்து தரேன்னு சொல்லலாம். காத்திருக்கப் பழகட்டும். ஏமாற்றங்களையும் தாங்கும் சக்தி வரனும்.
அன்பு வேறு.
செல்லம் வேறு.
இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
அன்பு கண்டிக்கும்.
செல்லம் கண்டிக்க பயப்படும்.
அன்பு தப்பை தப்புனு சொல்லும்
செல்லம் கோழைத்தனமானது.
அன்பு அரவணைக்கும்.
செல்லம் குழந்தைங்க சீறினா ஆடிப் போவாங்க.
அன்பு தேவையானதைத் தரும்.
செல்லம் கேட்ட எல்லாவற்றையுமே தரும்.
அம்மா அன்பு தான் கொடுப்பாள்.
அப்பா தான் கண்டிப்பையும் கொடுக்கனும்.
அப்பா கண்டிச்சா அம்மா குறுக்கே வராதீங்க.
சாலையில் பள்ளம் இருந்தால் அம்மா குழந்தையை கையில் துக்கிக் கொள்ளவே விரும்புவாள்.
அப்பா தான் "பார்த்து நடந்து வா" என்று சொல்லிவிட்டு செல்வார்.
குழந்தை தடுமாறி விழுந்தால் அம்மா ஓடிப் போய் தூக்குவாள்.
அப்பாவோ" அதெல்லாம் ஒண்ணுமில்ல. எழும்பி வா" என்று ஊக்கம் கொடுப்பார்.
சாலையை நாம் சரிசெய்ய இயலாது. சாலை எப்படி இருப்பினும் கவனமாக நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவே வாழ்க்கை.
கண்டிப்பு காட்ட அப்பா
குழந்தைகள் தவறு செய்தால் கண்டிச்சு வளர்க்க வேண்டும்.
அந்தக் காலத்தில் வீட்டில் நாலைந்து குழந்தைகள் இருப்பார்கள். பெரிய குழந்தையே சின்னதைக் கவனித்துக் கொள்ளும்.
இப்போ அனைவரது வீட்டிலும் ஒன்று, அல்லது இரண்டு குழந்தைகள் தான். அவர்கள் அதீத செல்லத்துடன் வளர்க்கப்படுகிறார்கள்.
அதனால் வளர்ந்த பின் சிறு ஏமாற்றங்களைக் கூட தாங்க முடியாதவர்களாக ஆகி விடுகின்றார்கள்.
"அத்தை பையன் நிறைய மார்க் வாங்கிட்டான் . நீ தான் கம்மி" இப்படி அந்தக் காலத்தில் யாரும் சொல்லல.
நூற்றுக்கு நூறு மார்க் வாங்கறதை விட நல்ல மனிதனாக வளர்வதே முக்கியம்.
குழந்தை கேட்ட எல்லாவற்றையும் உடனே கொடுக்கனும்னு அவசியமில்லை. ஒரு வாரம் கழித்து தரேன்னு சொல்லலாம். காத்திருக்கப் பழகட்டும். ஏமாற்றங்களையும் தாங்கும் சக்தி வரனும்.
அன்பு வேறு.
செல்லம் வேறு.
இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
அன்பு கண்டிக்கும்.
செல்லம் கண்டிக்க பயப்படும்.
அன்பு தப்பை தப்புனு சொல்லும்
செல்லம் கோழைத்தனமானது.
அன்பு அரவணைக்கும்.
செல்லம் குழந்தைங்க சீறினா ஆடிப் போவாங்க.
அன்பு தேவையானதைத் தரும்.
செல்லம் கேட்ட எல்லாவற்றையுமே தரும்.
அம்மா அன்பு தான் கொடுப்பாள்.
அப்பா தான் கண்டிப்பையும் கொடுக்கனும்.
அப்பா கண்டிச்சா அம்மா குறுக்கே வராதீங்க.
சாலையில் பள்ளம் இருந்தால் அம்மா குழந்தையை கையில் துக்கிக் கொள்ளவே விரும்புவாள்.
அப்பா தான் "பார்த்து நடந்து வா" என்று சொல்லிவிட்டு செல்வார்.
குழந்தை தடுமாறி விழுந்தால் அம்மா ஓடிப் போய் தூக்குவாள்.
அப்பாவோ" அதெல்லாம் ஒண்ணுமில்ல. எழும்பி வா" என்று ஊக்கம் கொடுப்பார்.
சாலையை நாம் சரிசெய்ய இயலாது. சாலை எப்படி இருப்பினும் கவனமாக நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவே வாழ்க்கை.
No comments:
Post a Comment