குழந்தைகள் உங்களது கண்ணாடி. நீங்கள் எவ்வழியோ அவர்களும் அவ்வழி.
நீங்கள் உறவுகளை உயர்வாகப் பேசி அறிமுகப்படுத்தினால் தான் அந்த உறவுகளை குழந்தையும் மதிக்கும். உறவும் நீடிக்கும்.
ஒவ்வொருவரையும் பெருமையாகப் பேசி அறிமுகம் செய்யுங்கள். கீழ்த்தரமாகப் பேசி குழந்தைகட்கு அறிமுகம் செய்யாதீர்கள்.
ஒரு குட்டிக் கதை கேட்கலாமா?
ஒரு பனிப்பிரதேசத்தில் நிறைய முள்ளம்பன்றிகள் வசித்தன. அது கடுமையான குளிர் காலம். பனிக்கொடுமை தாங்க இயலவில்லை.
அவை ஒன்றோடொன்று நெருங்கி நின்றால் கதகதப்பாக உணர்ந்தன. ஆனால், நெருங்கினால் முட்கள் குத்தின. சிராய்ப்புகள் ஏற்பட்டன.
விலகினால் குளிர் தாளாமல் மடிந்து விழுந்தன.
நெருங்கி நின்றால் முள் குத்தினாலும், பனிக்கொடுமை இல்லை. ஒரு இதமான சூடு கிடைத்தது.
இப்படித் தான் உறவுகளும்,
அதிகமா நெருங்கினால் சிறு சிறு சலசலப்புகள் வரும். அதற்குப் பயந்து உறவுகளே வேண்டாம் என்றால் தனிமை ; அது பனிக்கால கொடுமையைப் போல.
தனிமையை விட சிராய்ப்பு பரவாயில்லை.
கீறல், சிராய்ப்புகள் சகஜம் தான். இதமான அன்பு அதைவிடப் பெரியது.
முள்ளைப் பார்க்காமல், கதகதப்பான அன்பைக் காண கண்கள் பழக வேண்டும்.
உறவுகள் கூட இருந்தால் ஒரு மனோதைரியம்
தனியே இருந்தால் ஒரு மனச்சோர்வு.
எல்லோரும் என்கூட இருக்காங்க என்று நினைப்பதே ஆனந்தம் தருமே.
உறவுகளிடையே விமர்சனங்கள் வரத்தான் செய்யும். முள்ளைப் போல.
குளிர்கால நெருப்பு போல அதிகம் நெருங்காமலும் அதிகம் விலகாமலும் அளவோடு வாழப் பழக வேண்டும்.
உறவுகள் உன்னதமானவை என்பதை குழந்தைகட்கும் புரிய வைக்க வேண்டும். அவர்களை உயர்வாகப் பேசி அறிமுகப் படுத்துங்கள்.
நீங்கள் உறவுகளை உயர்வாகப் பேசி அறிமுகப்படுத்தினால் தான் அந்த உறவுகளை குழந்தையும் மதிக்கும். உறவும் நீடிக்கும்.
ஒவ்வொருவரையும் பெருமையாகப் பேசி அறிமுகம் செய்யுங்கள். கீழ்த்தரமாகப் பேசி குழந்தைகட்கு அறிமுகம் செய்யாதீர்கள்.
ஒரு குட்டிக் கதை கேட்கலாமா?
ஒரு பனிப்பிரதேசத்தில் நிறைய முள்ளம்பன்றிகள் வசித்தன. அது கடுமையான குளிர் காலம். பனிக்கொடுமை தாங்க இயலவில்லை.
அவை ஒன்றோடொன்று நெருங்கி நின்றால் கதகதப்பாக உணர்ந்தன. ஆனால், நெருங்கினால் முட்கள் குத்தின. சிராய்ப்புகள் ஏற்பட்டன.
விலகினால் குளிர் தாளாமல் மடிந்து விழுந்தன.
நெருங்கி நின்றால் முள் குத்தினாலும், பனிக்கொடுமை இல்லை. ஒரு இதமான சூடு கிடைத்தது.
இப்படித் தான் உறவுகளும்,
அதிகமா நெருங்கினால் சிறு சிறு சலசலப்புகள் வரும். அதற்குப் பயந்து உறவுகளே வேண்டாம் என்றால் தனிமை ; அது பனிக்கால கொடுமையைப் போல.
தனிமையை விட சிராய்ப்பு பரவாயில்லை.
கீறல், சிராய்ப்புகள் சகஜம் தான். இதமான அன்பு அதைவிடப் பெரியது.
முள்ளைப் பார்க்காமல், கதகதப்பான அன்பைக் காண கண்கள் பழக வேண்டும்.
உறவுகள் கூட இருந்தால் ஒரு மனோதைரியம்
தனியே இருந்தால் ஒரு மனச்சோர்வு.
எல்லோரும் என்கூட இருக்காங்க என்று நினைப்பதே ஆனந்தம் தருமே.
உறவுகளிடையே விமர்சனங்கள் வரத்தான் செய்யும். முள்ளைப் போல.
குளிர்கால நெருப்பு போல அதிகம் நெருங்காமலும் அதிகம் விலகாமலும் அளவோடு வாழப் பழக வேண்டும்.
உறவுகள் உன்னதமானவை என்பதை குழந்தைகட்கும் புரிய வைக்க வேண்டும். அவர்களை உயர்வாகப் பேசி அறிமுகப் படுத்துங்கள்.
No comments:
Post a Comment